மற்றொரு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஐதேகவில் இணைவு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான பெருமாள் இராஜதுரை சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நுவரெலிய மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
மேலும் பல ஆளும்கட்சி பிரமுகர்கள் எதிரணியின் பக்கம் தாவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஐதேகவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டார ஆளும்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.