மேலும்

சிறிலங்காவில் ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தல் – முறைப்படி அறிவிப்பு.

mahinda deshapriyaசிறிலங்காவில் அதிபர் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 8ம் நாள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இன்று மாலையில் அறிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று நடத்திய கலந்துரையாடலை அடுத்து, தேர்தல் ஆணையாளர், இதுபற்றிய அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டார்.

அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு டிசம்பர் மாதம் 8ம் நாள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.

வரும் ஜனவரி 2 அல்லது 3ம் நாள் தேர்தலை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குப் போதிய கால அவகாசம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதற்குப் பின்னர், ஜனவரி 8ம் நாள் அல்லது அதற்குப் பிந்திய நாட்களே உள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *