மேலும்

ஊடகங்களைச் சந்திக்கிறார் மைத்திரிபால – கொழும்பு நகர மண்டபத்தில் குவிந்துள்ள செய்தியாளர்கள்

pressசிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும், மைத்திரிபால சிறிசேன கொழும்பில் சற்றுநேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.

கொழும்பு நகர மண்டபத்தில் இந்தச் செய்தியாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

தற்போது அங்கு பெருமளவு செய்தியாளர்கள், மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்காக காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இன்று காலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்புக்கு மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அவர் அந்த அழைப்பை நிராகரித்திருந்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த, மைத்திரிபால சிறிசேனவின் வெளியேற்றம் ஒரு சூழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *