சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிப்பு – 1.30 மணிக்கு வெளியாகும்
அடுத்த சிறிலங்கா அதிபர் தேர்தல் பற்றிய அறிவிப்பு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகும் என்று, சிறிலங்கா அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். (2ம் இணைப்பு)
இந்த அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வமாக வெளியிடுவார் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களை பட்டாசு வெடித்து கொண்டாடும்படியும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக, சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று மதியம் 12 மணிக்குப் பின்னர், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று உறுதிப்படுத்தியிருந்தார்.
எனினும், சுபநேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதற்காகவே, பிற்பகல் 1.30 மணி வரை சிறிலங்கா அதிபர் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சிறிலங்கா அதிபரின் அறிவிப்புக்கான தாம் காத்திருப்பதாக, தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பரிய தெரிவித்துள்ளார்.
வரும் 2ம் நாள் தேர்தல் நடப்பதற்குரிய வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அன்று ஒரு வெள்ளிக்கிழமை என்பதால் தேர்தல் நடத்தப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வார நாட்களில் தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட, வெள்ளிக்கிழமையிலோ, பௌர்ணமி நாளிலோ தேர்தல் நடத்தப்படாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிபபை வெளியிட்ட பின்னர், தேர்தல் நாளை தேர்தல்களை ஆணையாளரே அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.