அம்பாந்தோட்டையில் சீனக் கடற்படைத் தளமா? – சிறிலங்கா நிராகரிப்பு
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனக் கடற்படைத் தளம் அமையவுள்ளதாக, வெளியான செய்திகளை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகளில் வெளிநாடுகளில் 18 தளங்களை அமைக்க சீனக் கடற்படை திட்டமிட்டுள்ளதாகவும், அதில் சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகமும் ஒன்று எனவும், நமீபிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, சிறிலங்கா ஊடகங்களிலும் பரபரப்பாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியவிடம், இதுகுறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனக் கடற்படைத் தளம் அமையவுள்ளதாக வெளியான தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.