மேலும்

வரும் 18ம் நாள் நள்ளிரவு வெளியாகிறது அதிபர் தேர்தல் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல், வரும் 18ம் நாள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 18ம் நாளுடன், நான்கு இரண்டாவது பதவிக்காலத்தின் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

அன்று நள்ளிரவு, அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வர்த்தமானியில் வெளியிட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே புதிய தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதம் முதல் வாரம் சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *