வடக்கு, கிழக்கில் மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரை – அமைச்சர் வாசுதேவவிடம் பொறுப்பு
வரும் ஜனவரி மாதம் அதிபர் தேர்தலை நடத்த உத்தேசித்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்த தேர்தலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கான பரப்புரைப் பணிகளை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் ஒப்படைத்துள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே அதிபர் தேர்தலில் அரசதரப்பு வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதால், வடக்கு. கிழக்கு மாகாணங்களின் தேர்தல் பரப்புரைப் பொறுப்பு முழுவதையும், அவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்காவிடம் ஒப்படைத்துள்ளார்.
கடந்தவாரம், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முக்கிய பிரமுகர்கள் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போது, இந்தத் தீர்மானத்தை அவர் அறிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.