மேலும்

கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி மாவட்டம் கிடையாது – சிறிலங்கா அரசு அறிவிப்பு

கிழக்கில் முஸ்லிம்களுக்குத் தனி மாவட்டத்தை அமைக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரட்ண, முஸ்லிம்களுக்கு தனி மாவட்டம் அமைக்கும் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.

“இது நாட்டில் மேலும் குழப்பநிலையை ஏற்படுத்தக் கூடும்.

பெரும்பாலான இலங்கையர்கள் ஒன்றுபட்ட நாட்டுக்குள் வாழவே விரும்புகின்றனர்.

அவர்கள் பிரிவினையை விரும்பவில்லை.

கிழக்கில் மட்டுமன்றி, முஸ்லிம்கள் மத்திய மாகாணத்திலும் வாழ்கின்றனர்.

நாட்டை பிரிக்க முயன்றால், அது நாட்டில் குழப்பநிலையை ஏற்படுத்தும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *