மேலும்

Archives

கோத்தாவின் இந்திய பயணத்தை சீர்குலைக்கவே பெயர்ப்பலகைககள் அழிப்பு  – மகிந்த

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவின் இந்தியப் பயணத்தை குழப்ப முனையும் ஒரு குழுவினரே,  தென்பகுதியில் தமிழ் மொழியிலான வீதிப் பெயர்ப்பலகைகளை சேதப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

புத்தளத்தில் றிசாத் பதியுதீனின் வாகனம் மீது தாக்குதல்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான றிசாத் பதியுதீன் பயணம் செய்த வாகனம் மீது, புத்தளத்தில் தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலரானார் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன  நியமிக்கப்பட்டுள்ளார்.சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை இவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கினார்.

கடமைகளைப் பொறுப்பேற்றார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக, கோத்தாபய ராஜபக்ச இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

‘போருழல்காதை’ : நூல் அறிமுக- விமர்சன அரங்கும் திரையிடலும்!

குணா கவியழகனின்  ‘போருழல் காதை’ நாவல்  நூல் அறிமுக- விமர்சன அரங்கும் திரையிடலும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

வெளியேற்றப்பட்ட ஹிஸ்புல்லா – ஐதேக அமைச்சர்களுக்கு கூச்சல்

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வுக்குச் சென்ற ஐதேக அமைச்சர்கள் பலருக்கும் பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

வாக்களிப்பு முடிந்தது – எண்ணும் பணி ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் சுமார் 80 வீதமாக வாக்காளர்கள் வாக்களித்திருக்கக் கூடும் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் வாக்களித்தனர்

சி்றிலங்கா அதிபர் தேர்தலில்  அரசாங்கத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், வேட்பாளர்கள்  இன்று காலையிலேயே தமது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.

சஜித்தின் பரப்புரை மேடையில் சுயேட்சை வேட்பாளர் இலியாஸ்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும், இலியாஸ் நேற்று புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் மேடையில் ஏறி ஆதரவு தெரிவித்தார்.

தொடங்கியது யாழ். – சென்னை விமான சேவை

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான முதலாவது பயணிகள் விமான சேவை நேற்று ஆரம்பமாகியது.