கோத்தா – மோடி ஒரு மணி நேரம் தனியாக பேச்சு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தனியாக ஒரு மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று மதியம் ஹைதராபாத் ஹவுசில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தனியாக ஒரு மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று மதியம் ஹைதராபாத் ஹவுசில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.
சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுடன் நேற்று நடத்திய பேச்சு ஆக்கபூர்வமானதாக இருந்ததது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட போதும், அதுபற்றி சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும், நல்லிணக்க செயல்முறையை சிறிலங்கா அரசு முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நேற்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.
மீரிஹானவில் உள்ள Newshub.lk இணையத்தள செய்தி நிறுவன பணியகத்தில் சிறிலங்கா காவல்துறையினர் நேற்றுக்காலை தேடுதல் நடத்தியுள்ளனர்.
சிறிலங்காவின் இடைக்கால அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக தினேஸ் குணவர்த்தன பொறுப்பேற்றதை அடுத்து, வெளிநாட்டுத் தூதுவர்கள்கள் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியக் கடற்படைக் கப்பலான ‘நிரேக்க்ஷக்’ பயிற்சிப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவின் இணை அனுசரணையுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்து நிறைவேற்றிய, சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, 30/1 தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட ஆதரவை முழுமையாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.