மேலும்

Archives

ஊடகத்துறை பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான நியமனம்

சிறிலங்காவின் நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும், ஊடகத்துறை பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று நடந்த நிகழ்வில், அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

தத்தளிக்கும் சென்னை – தவிக்கும் மக்கள் (படங்கள்)

பெருமழையினால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை நகரத்தின் பெரும் பகுதி இன்னமும் வெள்ளத்தின் பிடியில் சிக்கியிருக்கின்றது. இலட்சக்கணக்கான மக்களை அநாதரவாக்கியுள்ள வெள்ளம், இன்னமும் வடியாத நிலையில், நள்ளிரவில் இருந்து மீண்டும் மழை பெய்து வருகிறது.

வெள்ளத்தில் மூழ்கியது சென்னை – இலட்சக்கணக்கான மக்கள் தவிப்பு

முன்னெப்போதும் இல்லாத வகையில் பெய்து வரும் வரலாறு காணாத பெருமழையால், சென்னை மாநகரமே, வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளது. இதனால், கட்டடத் தீவுகளாக சென்னை நகரம் காட்சி அளிக்கிறது. இலட்சக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, இருப்பிடம், உணவு, அடிப்படை வசதிகளின்றித் தவித்து வருகின்றனர்.

வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள் – சென்னை விமான நிலைய காட்சிகள்

சென்னையில் கொட்டிவரும் பெருமழையால், ஏற்பட்டுள்ள வெள்ளத்தை அடுத்து சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் விமானங்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன.

இந்தியத் தளபதி வராததால், அமைதிப்படையினரின் நினைவிடத்தில் துணைத்தூதுவர் அஞ்சலி

இந்திய இராணுவத் தளபதியின் யாழ்ப்பாண வருகை ரத்துச் செய்யப்பட்டதால், இந்திய அமைதிப்படையினருக்கு, அஞ்சலி செலுத்த பலாலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் மட்டும் பங்குபற்றினார்.

வரலாறுகாணா வெள்ளத்தில் மிதக்கும் சென்னை – விமான நிலையமும் மூடப்பட்டது

கடந்த இரண்டு நாட்களாக விடாமல் கொட்டி வரும் மழையால், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள அதேவேளை, சென்னை நகரம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது.

இந்தியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

பூகோள காலநிலை மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாரிசில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். பூகோள காலநிலை மாநாட்டின் போதே நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்திய இராணுவத் தளபதியை யாழ். வரவிடாமல் தடுத்தது மழை

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் இன்று யாழ்ப்பாணம் செல்லத் திட்டமிட்டிருந்த போதிலும், அந்தப் பயணம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க தீவிரவாத முறியடிப்பு நிபுணர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பணியாற்றும் தீவிரவாத முறியடிப்பு நிபுணர் ஒருவர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நௌருவில் மரத்தில் ஏறிப்போராட்டம் நடத்திய தமிழ் அகதி சிறையில் அடைப்பு

நௌரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் மரத்தின் மீது ஏறிப் போராட்டம் நடத்தியதால், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.