மேலும்

Archives

நவிபிள்ளையை எச்சரித்து விட்டு போரைத் தீவிரப்படுத்திய மகிந்த – கனடாவில் வெளிவந்த உண்மை

தமது நாட்டில் தீவிரவாதத்துக்கு முடிவுகட்டும் பாரிய நடவடிக்கையை தாம் முன்னெடுப்பதாகவும், அதற்காகத் தன்னை நான் விமர்சனம் செய்யக் கூடாது என்றும், சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச தன்னிடம் தெரிவித்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை.

கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்கள்

ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன. ஜேஎஸ் மகினாமி, ஜே.எஸ்சுசனாமி ஆகிய போர்க்கப்பல்களே கொழும்பு வந்துள்ளன.

கடன்பொறியில் இருந்து தப்பிக்க சீனாவின் நிபந்தனைகளை ஏற்கும் சிறிலங்கா

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளாலும் வர்த்தக மற்றும் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இந்திய மாக்கடலில் தனது இருப்பை நிலைப்படுத்துவதற்கு சீனாவிற்கு சிறிலங்கா தேவைப்படுகிறது.

கூட்டமைப்பின் சமஸ்டித் தீர்வு நிலைப்பாட்டுக்கு ஜெர்மனி ஆதரவு

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஸ்டி தீர்வை முன்வைத்திருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு ஜேர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத் துறையிலும் நெருங்கிய உறவைப் பேண சீனா- சிறிலங்கா இணக்கம்

பாதுகாப்புத் துறையில் நெருக்கமான உறவுகளை பேணிக் கொள்வதற்கு சீனாவும், சிறிலங்காவும் விருப்பம் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தலையணைச் சண்டை – மோதிக்கொண்ட உறுப்பினர்கள்

சிறிலங்காவில் எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டப்படவுள்ள சிங்கள- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாடாளுமன்ற மைதானத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

சிறிலங்காவுக்கான உதவிகள் தனிநபர்களையோ கட்சிகளையோ சார்ந்ததாக இருக்காது – சீன அதிபர்

சிறிலங்காவுக்கான சீனாவின் உதவிகள், கொள்கைகளின் அடிப்படையிலும், சிறிலங்கா மக்களின் நலன் அடிப்படையிலுமே இருக்குமே தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்களைச் சார்ந்ததாக இருக்காது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

துறைமுக நகர திட்டத்தை விரைவுபடுத்த சீனா- சிறிலங்கா இணக்கம் – இழப்பீடு குறித்து சீனா மௌனம்

முடங்கியுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் சீனாவும் சிறிலங்காவும், உறுதியுடன் இருப்பதாக, சீனாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா- சீனா இடையே ஏழு உடன்பாடுகள் கைச்சாத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் நேற்று ஏழு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

கொழும்பில் பணியகத்தை திறக்கிறது சீன அபிவிருத்தி வங்கி

சீன அபிவிருத்தி வங்கியின் பணியகம் ஒன்று விரைவில் கொழும்பில் திறக்கப்படவுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சீன அபிவிருத்தி வங்கியின் தலைவர், ஹு ஹுவாய்பாங்கிற்கும் இடையில் நேற்று பீஜிங்கில் நடந்த சந்திப்பிலேயே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.