மேலும்

சிறிலங்கா அதிபருக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

london-demo (2)சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று லண்டனில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய அரசியல் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றவர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு போர்க்குற்றவாளி என்றும், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

london-demo (2)

london-demo (1)london-demo (2)

2009ஆம் ஆண்டு மே மாதம், பெருமளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் சி்றிலங்காவின் பதில் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரிபால சிறிசேன கடமையாற்றியிருந்தார் என்ற வகையில், போர்க்குற்றங்களுக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *