முதலமைச்சர் தலைமையில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு
இறுதிக்கட்டப் போரில், முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூரும், நிகழ்வு இன்று காலை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது.
இறுதிக்கட்டப் போரில், முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூரும், நிகழ்வு இன்று காலை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது.
சிறிலங்காவில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் கொட்டி வரும், மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவினால், இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காணாமற்போயுள்ளதுடன், 73 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த, 370,067 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ், நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
ரயன் எயர் விமானத்தில் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்ட இலங்கையர் ஒருவர், நோர்வேயின் மொஸ் விமான நிலையத்தில், நோர்வே காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார்.
கடந்த வாரம் ஒரு காலைப் பொழுது,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கைத்தொலைபேசி சில தடவைகள் ஒலித்தது. அவர் அப்போது தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்தார். கொழும்பு நகரில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றான, ஸ்ரான்ட்மோர் கிரசன்ட்டில் அந்த வதிவிடம், சிறிலங்காவின் விமானப்படை மற்றும் இராணுவத் தளபதிகளின் வதிவிடங்களுக்கு நடுவே உள்ளது.
அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டமிடல் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ஆர் ருடர், சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டமை தொடர்பான தகவல்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் உஜ்ஜெயின் நகரில் நடைபெறும் கும்பமேளாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட அனைத்துலக மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து சிறிலங்கா விமானப்படை, நேற்றுக்காலை கடல்-வான் மீட்பு ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று நடந்த இருதரப்புப் பேச்சுக்களில், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் விவகாரத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக புதுடெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின், மூலோபாய திட்டமிடல் மற்றும் கொள்கை பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ருடர் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.