மேலும்

Archives

பல்கலைக்கழக மாணவர்களின் முற்றுகையில் சிக்கிய யாழ். மாவட்டச் செயலகம், ஆளுனர் செயலகம்

கொக்குவிலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தப் படுகொலைக்கு விரைவான நீதி கோரியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை யாழ். மாவட்டச் செயலகத்தையும், வடமாகாண ஆளுனர் செயலகத்தையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

சுன்னாகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மீது வாள்வெட்டு – இருவர் காயம்

சுன்னாகம் நகரில் மூகமூடி அணிந்து உந்துருளிகளில் வந்த மர்ம நபர்கள் வாளால் வெட்டியதில், சிறிலங்கா காவல்துறையின் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகொலை செய்யப்பட்ட மாணவன் கஜனின் உடல் கிளிநொச்சியில் அடக்கம்

கொக்குவில் – குளப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால், ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவன் நடராஜா கஜனின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இளம் ஊடகவியலாளர் அஸ்வினின் உடல் மாதகலில் நல்லடக்கம்

உக்ரேனில் காலமான இளம் ஊடகவியலாளரும், பிரபல கேலிச்சித்திர வரைஞருமான அஸ்வின் சுதர்சனின் இறுதிநிகழ்வு நேற்று மாதகலில் இடம்பெற்றது.

யாழ். மாணவர்கள் கொலை – ஐந்து சிறிலங்கா காவல்துறையினருக்கும் விளக்கமறியல்

கொக்குவில் – குளப்பிட்டிச் சந்தியில் நேற்றுமுன்தினம் இரவு இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சிறிலங்கா காவல்துறையினரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய – சிறிலங்கா கடற்படைகள் கடல் எல்லையில் சந்திப்பு

இந்திய – சிறிலங்கா கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைகளுக்கு இடையிலான 27 ஆவது அனைத்துலக கடல் எல்லைச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை – 5 சிறிலங்கா காவல்துறையினர் கைது

கொக்குவில்- குளப்பிட்டிச் சந்தியில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே மரணமானதாக தெரியவந்துள்ளது.

சம்பந்தனைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சம்பந்தனைச் சந்தித்தார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,  சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நிமால் நினைவு நாளில் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.