பிரித்தானியா புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா அதிபர்
லண்டனில் நடைபெறவுள்ள ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
லண்டனில் நடைபெறவுள்ள ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
பாக்கு நீரிணையில் அமைந்துள்ள கச்சதீவில், புதிய தேவாலயத்தை அமைக்கும் பணிகளை சிறிலங்கா கடற்படை ஆரம்பித்துள்ளது.
வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்களில் இடம்பெற்றுள்ளவர்கள் பற்றிய மற்றொரு தொகுதி பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், சிறிலங்காவில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நெருங்கிய சகாவான நிசங்க சேனாதிபதியின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவில் இப்போதும் சித்திரவதைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக, ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையில், சிங்களவர்களால் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு சிங்களக் குடியேற்றம் ஒன்று நிறுவப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா கடற்படை உள்நாட்டில் தயாரித்த, ஒன்பது கரையோர ரோந்துப் படகுகளை நைஜீரியாவுக்கு விற்பனை செய்துள்ளது. வெலிசறையில் உள்ள படகு கட்டுமான தளத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில், நைஜீரியத் தூதுவர், அகமட்டிடம், சிறிலங்கா கடற்படை அதிகாரிகளால் இந்தப் படகுகள் கையளிக்கப்பட்டன.
மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணமான செய்தியைக் கேள்வியுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உடனடியாக, அவரது வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு, அவரது தாய்ப் படைப்பிரிவான இலகு காலாட்படைப் பிரிவினால் பிரியாவிடை அளிக்கப்பட்டது.
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும், சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கும் இடையிலான, ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க நாடாளுமன்றக் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை சித்திரவதை செய்யும், அன்ட்ரொயிட் விளையாட்டு செயலி ஒன்று, கூகுளில் அறிமுகமாகியிருக்கிறது.