மேலும்

நாள்: 17th December 2025

பேரிடர் சவால்களை சமாளிக்க முழு ஆதரவு – சீனா உறுதி

சிறிலங்கா மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், பேரிடர் சவால்களை சமாளிக்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும்,  சீனா முழு ஆதரவை  வழங்கும் என அறிவித்துள்ளது.

ஜனவரியில் அனைத்துலக கொடையாளர் மாநாடு – சிறிலங்கா அறிவிப்பு

டிட்வா பேரிடர் மீள்கட்டமைப்புக்காக நிதி திரட்டுவதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், சிறிலங்கா  சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்தும் என, நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர்  அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 மில்லியன் டொலர்களை வழங்கியது கனடா

சிறிலங்காவில் அண்மைய பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசரகால நிவாரண முயற்சிகளை ஆதரிப்பதற்காக, கனடா 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் சிறிலங்கா பயணம்

சீனாவின்,  தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் (Wang Dongming) மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக  நேற்று சிறிலங்காவுக்கு வந்துள்ளார்.

2.5 மில்லியன் டொலரை அவசர கொடையாக வழங்குகிறது ஜப்பான்

பேரிடரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு ஜப்பானிய அரசாங்கம் 2.5 மில்லியன் டொலர் அவசர கொடையை வழங்க முடிவு செய்துள்ளதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி (Toshimitsu Motegi) தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 54 தொன் உதவிப் பொருட்களுடன் வந்தது ‘சௌர்யா’

இந்திய கடலோர காவல்படை  கப்பலான ‘சௌர்யா’  மனிதாபிமான உதவிப் பொருள்களுடன் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளது.

அசோக ரன்வல கலாநிதி பட்டச் சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்கவில்லை

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதிப் பட்டச் சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று சுகாதார அமைச்சரும் அரசாங்க ஊடகப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.