வட மாகாணசபையின் வெகுமதி ஆசனத்துக்கு ஜெயசேகரம் – புளொட் கடும் எதிர்ப்பு
வடக்கு மாகாணசபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வெகுமதி ஆசனங்களில் ஒன்றை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வதில், தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.