மேலும்

அனைத்துலக கொடையாளர் மாநாட்டைக் கூட்டுவதில் இழுபறி

டிட்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்க, நிதி திரட்டுவதற்கு அனைத்துலக கொடையாளர் மாநாட்டை நடத்தும் சிறிலங்கா அரசின் திட்டம் தாமதமாகியுள்ளது.

மாவிலாறு போல மாறிய தையிட்டி விவகாரம்

தைப்பொங்கல் விழா மற்றும் அரச நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, யாழ்ப்பாணம் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, அங்கு வெளிப்படுத்திய சில கருத்துக்கள் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.

கணக்காய்வாளர் நாயகம் நியமனம் – மகாநாயக்க தேரர்கள் அனுரவுக்கு கடிதம்

கணக்காய்வாளர் நாயகம்  திணைக்களத்தின் மிகவும் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை,  கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க வலியுறுத்தி, மகாநாயக்க தேரர்கள்  கூட்டாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படை கப்பல்கள்

இந்திய கடலோர காவல்படையின் இரண்டு ரோந்துக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளன.

கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறியும் தமிழ் அரசு

அரசியலமைப்பு பேரவையில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை விலகிக் கொள்ளுமாறு, தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டு, மூன்று வாரங்கள் ஆகிவிட்டன.

சிறிதரனை நீக்கியதாக சுமந்திரன் அறிவிப்பு – மறுக்கிறார் சி.வி.கே.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நீக்குவதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பதில் பொதுச்செயலாளர்  எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக போராட்டம் – வவுனியா கூட்டத்தில் முடிவு

கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா வடக்கு, நெடுங்கேணியில் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புப் பேரவையில் இருந்து விலக சிறிதரன் மறுப்பு

அரசியலமைப்புப் பேரவையில் இருந்து விலகப் போவதில்லை என, இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அரசியல் குழுக் கூட்டத்தில் அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவில் சமூக உறுப்பினர்கள் நியமனம் – நாடாளுமன்ற மரபை மீறிவிட்டது அரசாங்கம்

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு  பேரவைக்கு  மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை பெயரிடுவதற்கு முன்னர், நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தியதன் மூலம், நாடாளுமன்ற மரபு மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சிறிலங்காவுக்கு ட்ரோன்களை விற்க முன்வந்தது துருக்கியே

சிறிலங்காவுக்கு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) விற்க துருக்கியே அரசாங்கம் முன்வந்துள்ளது.