வன்னி தேர்தல் மாவட்ட இறுதி முடிவு – சஜித் வெற்றி
சிறிலங்கா அதிபர் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் வெளியானதை அடுத்து, இறுதி முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் வெளியானதை அடுத்து, இறுதி முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் 11 தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஜித் பிரேமதாச 84 வீதமான – 312,722 வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் வடக்கில் பெரும்பாலான தொகுதிகளில் எதிர்பாராத வகையில் கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஆரியவன்ச திசநாயக்க, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றிருக்கிறார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 49 வீத வாக்குகளுடன் முன்னிலையில் இருந்து வருகிறார்.
வடக்கில் ராஜபக்சவினரின் செல்வாக்கு பெரும் சரிவைச் சந்தித்திருப்பதை, தற்போது வெளியாகியுள்ள இரண்டு தேர்தல் முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலின், மாவட்ட தேர்தல் தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களின் தொகுதிகளை சஜித் பிரேமதாசவும், தெற்கிலுள்ள தொகுதிகளை கோத்தாபய ராஜபக்சவும் கைப்பற்றி வருகின்றனர். .
சிறிலங்கா அதிபர் தேர்தலில் அஞ்சல் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் முடிவுகள் தற்போது அதிகாரபூர்வமாக வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் சஜித் பிரேமதாசவும், ஏனைய பகுதிகளில் கோத்தாபய ராஜபக்சவும் முன்னிலை பெற்றுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவடைந்து வாக்குகளை எண்ணும் பணி இடம்பெற்று வரும் நிலையில் சமூக ஊடகங்களில் போலியான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், அவை அதிகாரபூர்வமானவை அல்ல என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் சுமார் 80 வீதமாக வாக்காளர்கள் வாக்களித்திருக்கக் கூடும் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவடைய இன்னும் ஒன்றரை மணி நேரமே உள்ள நிலையில், பிற்பகல் 2 மணி வரை, 60 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.