வன்னி மாவட்ட இறுதி முடிவு – 4 ஆசனங்களைக் கைப்பற்றியது தமிழரசுக் கட்சி
வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில், திகாமடுல்ல மாவட்டத்தில் அம்பாறை தொகுதியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், கல்முனை,சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளை ஐதேகவும் கைப்பற்றியுள்ளன.
யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும், ஈபிடிபி மற்றும் ஐதேக ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் மாவட்ட ரீதியாக கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஆசனங்கள் தொடர்பான இறுதி முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதுவரை வெளியாகியுள்ள மாவட்ட முடிவுகளின் படி ஐ.ம.சு.மு 83 ஆசனங்களையும், ஐதேக 92 ஆசனங்களையும், ஜேவிபி 4 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடத்தப்பட்ட தேர்தலில், இதுவரையில் யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, மாத்தறை, பொலன்னறுவ ஆகிய மூன்று மாவட்டங்களின் அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலைத் தொகுதியை தமிழரசுக் கட்சியும், மூதூர் தேர்தல் தொகுதியை ஐதேகவும், சேருவெல தொகுதியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கைப்பற்றியுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உடுப்பிட்டி, சாவகச்சேரி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, நல்லூர், பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோப்பாய், மானிப்பாய், வட்டுக் கோட்டைஆகிய அனைத்துத் தொகுதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலின் தொகுதி மட்டத்திலான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் ஐதேக, ஐ.ம.சு.மு ஆகிய கட்சிகள் இரண்டும், மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றன.
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இது வரை எணணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், 1 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்ட 13 பேரினது விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.