மேலும்

மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நிலவும் மத உணர்வுகள் குறித்து விவாதிப்பதாயின், தமிழ் உலகினால்  ‘தந்தை  பெரியார்’ என்று அழைக்கப்பட்ட ஈவே ராமசாமி அவர்களின் போராட்டத்திலிருந்து தொடங்குவதே பகுத்தறிவுள்ள எந்த தமிழரும்  கொண்டிருக்க கூடிய சிறந்த சிந்தனையாகும்.

லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நிலவும் மத உணர்வுகள் குறித்து விவாதிப்பதாயின், இந்து மதத்தினதும் ஏனைய மதங்களினதும் மூடநம்பிக்கைகளையும் சமூக மற்றும் பால் ஏற்றத்தாழ்வுகளையும் அடியோடு அறுத்து எறிய வேண்டும் என்று தனது வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்து போராடிய, தமிழ் உலகினால்  தந்தை  பெரியார் என்று அழைக்கப்பட்ட ஈவே ராமசாமி அவர்களின் போராட்டத்திலிருந்து தொடங்குவதே பகுத்தறிவுள்ள எந்த தமிழரும்  கொண்டிருக்க கூடிய சிறந்த சிந்தனையாகும்.

மதம் மக்களுக்கு விசம் போன்றது எல்லா மதங்களும் மனிதர்களின் ஒற்றுமையை தவிர்க்கிறது ஆகவே எல்லா மதங்களும் இந்த நாட்டிலிருந்து விரட்டப்பட வேண்டும் என்பது பெரியாரின் சிந்தனையாக இருந்தது. ஆனாலும் பிறரின் மதநம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பதை  மனதில் கொண்டே பெரியார் தமது கருத்துகளை தெரிவித்து வந்தார்

இருபதாம் நுற்றான்டின் ஆரம்பத்திலிருந்து, குறிப்பாக சொல்வதானால் 1916 ஆம்ஆண்டு ரீ எம் நாயர். பி தியாகராச செட்டியார் போன்ற தலைவர்களால் நீதிக் கட்சி  ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து திராவிடர் அரசியல் ஆரம்பமானது.  .

1919 ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்த பெரியார் 1025இல் இந்திய தேசிய காங்கிறஸ் ஒரு பிராமணீயர்களின் ஆதிக்கம் கொண்டது என்ற  முரண்பாட்டால் அதிலிருந்து வேளியேறி சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை உருவாக்கினார்.

பல்வேறு அரசியல் போராட்டங்கள் இந்துத்துவ ஆக்கிரமிப்புகள் பிரித்தானிய ஆட்சியாளர்களின் அழுத்தங்களை எதிர் கொண்ட நீதிக்கட்சி,  1944 இல் பெரியாரின் தலைமையிலே திராவிடர் கழகமாக பரிணமித்தது.  சுமார் அறுபது ஆண்டுகளாக தமிழ் நாட்டில் பெரியார் உருவாக்கிய சமூக விழிப்புணர்வு சிந்தனைகள் இன்று வரை மிக ஆழமான தாக்கத்தை விளைவித்து வருகிறது.

இதன் காரணமாக இன்று வரை இந்து மத அடிப்படைவாத சிந்தனைகளின் பால் அகில இந்தியாவுமே சார்ந்து இருக்கும் அதேவேளை தமிழ் நாடு மாநிலம் மட்டும் தனித்துவமான மதசார்பற்ற போக்கை கொண்டிருப்பதாக கணிப்பிடப்படுகிறது.

இந்து மதத்தின் பெயரால் சாதீய வேறுபாடுகள் தமிழ் சமூகத்தின் மத்தியில் திணிக்கப்படுவதை பெரியார் கடுமையாக சாடினார். இது தமிழ் சமூகத்தின் மத்தியில்  பிராமணீய ஆதிக்கத்திற்கு எதிராக  அமைந்தது.

அதேவேளை பிராமணீயத்துக்கு எதிராக குரல் எழுப்பினாலும் பிராமணர்களை அவர் எதிர்க்கவில்லை என்பது அவரது பகுத்தறிவு கொள்கையாகும்.

ஒரு மனிதனுடன் இன்னும் ஒரு மனிதன் தொடர்பு கொள்ளும் இடத்தில் சாதி தடைக்கல்லாக இருக்கலாகாது என்பது பெரியாரிய சித்தாந்தத்தின் பிரதான பார்வையாக இருந்தது.

இன்று இந்திய மத்திய அரசில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் இந்து மத அடிப்படைவாதம் இந்தியா முழுவதும் ஒரு மதம், ஒரு மொழி, ஒரு ஆட்சி என்ற பார்வையை பலவந்தமாக இந்திய இனங்கள் மத்தியில் திணிக்க முயல்கிறது. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் இந்தி திணிப்பிற்கு எதிராக  அன்றுலிருந்து  இன்றுவரை எதிர்த்து நிற்பது பெரியாரிய வாதிகளின் சித்தாந்தமே என்றால் அது மிகையாகாது.

பிரித்தானிய ஆதிக்க காலத்தில் மெட்ராஸ்  பிரசிடென்சி என்று 1937அம் ஆண்டிலிருந்து 40ஆம் ஆண்டுகளில் தமிழ் நாடு ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்கள் அழைக்கப்பட்ட காலத்தில் முதல்வராக பதவி அமர்த்தப்பட்ட இராஜாஜி இராஜகோபாலாச்சாரியார் அவர்களின் தலைமையில் இந்தி மொழி அனைத்து பள்ளிகூடங்களிலும் கட்டாய பாடமாக  கற்பிக்கப்பட வேண்டும். என்று மசோதா நிறைவேற்றப்பட்டதிலிருந்து இந்தி மொழிக்கெதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

இன்று மீண்டும் இந்திய மத்திய அரசில்  இந்து ஆதிக்கவாதத்தின் கை ஒங்கிய நிலையில்   தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஏழைகளுக்கு உயர்கல்வி கிடைக்காத வகையிலான மறைமுக திட்டமாக மீண்டும் மாணவர்கள் தரப்படுத்தப்பட்டு குலக்கல்வி என்ற பெயரில் சாதீய அடிப்படையிலான தொழில்களை திணிக்கும் முறை ஒன்று கொண்டு வரப்படுவதாக தமிழ் நாட்டு கல்வியாளர்கள் கூறி வருகிண்றனர்.

தமிழ் மக்கள் மத்தியில் இந்து மத மேலாதிக்கம் மிக நெடும் காலமாக திணிக்கப்பட்டு வருவதாக பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை  கொள்கையின் பால் சார்ந்த தலைவர்களான அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் பெரியாருடன் சேர்ந்தும் பின்பு திராவிட முன்னேற்றகழகம் என்னும் கட்சியை பெரியாரில் இருந்து பிரிந்து சென்று ஆரம்பித்ததிலிருந்தும் கூறி வந்தனர்.

இதனால் மதம் சாதீயம் ஆகியவற்றை பொது மன்றத்தில் எதிர்க்கும் தரப்பு ஒரு புறமும், மதம் சாதீயம் ஆகியவற்றை ஆதரித்தோ அல்லது ஒரு பொருட்டாக காட்டி கொள்ளாத தரப்பு மறுபுறமாகவும் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களிலும் விவாதங்கள் இடம் பெறுவதை பொது வாக காணலாம்.

ஆனால் அரசியலில் தமிழ் நாட்டு வாக்கு வங்கிகளை தக்கவைத்து கொள்ளும் வகையில் சாதீய கட்சித் தலைவர்களை தம்மகத்தே சேர்த்து கொள்ளும் சுயமரியாதைவாத  பகுத்தறிவுவாத கட்சிகளையும் காணக்கூடியதாக இருக்கிறது என்பது முக்கியமான தாகும்.

ஆக இன்றுவரை தமிழ் நாடு இந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மத வேறுபாடுகள் இல்லாத ஒரு மாநிலமாக கணிப்பிடப்படுவதற்கு திராவிடர் கழகத்தின் பகுத்தறிவு வாத்தின் மீதான  அடிமட்ட மக்கள் மத்தியிலான விழிப்புணர்வு தான் காரணம் என்பது பல தமிழக  கல்விமான்கள் சிலரது  கருத்தாக உள்ளது.

இன்றைய தமிழ் நாடு

இன்றைய தமிழ் நாட்டிலும் , இந்து மத்தினால் உருவாக்கப்பட்ட சமூக கட்டமைப்பிற்கும்  அதனை எதிர்த்து நிற்கும் கொள்கைக்கும் இடையில் ஒரு விவாதப் போர் இடம் பெற்ற வருவதை காணக் கூடியதாக உள்ளது

சமூக ஏற்றதாழ்வு இதில் மிக முக்கிய இடம்பிடிக்கிறது. சமூக ஏற்றத்தாழ்விற்க சாதீயமே காரணம் என்ற கருத்தின் அடிப்படையில் சாதீயத்திற்கு இந்து மதமே காரணம் என்று பொரியார் காலத்திலிருந்து போராடப்படுவதால்  இந்துத்துவ மேலாண்மைக்கு இடமளிக்கக் கூடாது என்ற போக்கிற்கும், மதக்கோட்பாடு ஆன்மீகம், கலாச்சாரம் என்பதன் பெயரில் அதிகமான ஒரு பகுதியினர் மதசெயற்பாடுகளை ஊக்குவித்து வருகின்றனர் .

ஏன் மத நம்பிக்கை அற்றவர்களாக தம்மை காட்டிக் கொள்ளும் பல அரசியல்வாதிகள், தமது மனைவியரை கோவில் பூசை அர்ச்சனைகள் செய்து வர அனுமதிக்கின்றனர் என மதவாதிகள் தமது எதிர்தரப்பினரை கேலி செய்வதுவும் இருந்து தான் வருகிறது. இதனால் எந்த துறையிலும்  தமிழ் நாட்டு அரசியல் மதநம்பிக்கை அற்றவர்களின் முகாம், இந்துத்துவ பண்பாட்டு முகாம் என இரு பிரிவுகளாக உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

அதேவேளை மதநம்பிக்கை அற்றவர்கள் சமூக நீதியின் பால் அதிகம் கவனம் செலுத்துவதாக  தம்மை காட்டி கொள்ள முயல்கின்றனர்.  இந்த மத நம்பிக்கை அற்ற முகாமை திராவிடர் என்ற தென் மாநிலங்கள் அனைத்தையும் இணைத்த ஒரு பிராந்திய அரசியலாக இவர்கள் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

ஆனால் இதற்கு ம் எதிராக திராவிடம் என்ற சொல் தமிழ் நாட்டிலேயே அதிகம் பேசப் படுவதாகவும் ஏகைய திராவிட மாநிலங்களில் இது குறித்து எவரும் கரிசனை கொள்வதில்லை என இன்னும்  ஒரு சாரார் கருத்து  கொண்டுள்ளனர்.

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த திராவிட முன்னேற்ற  கழகம்,   அதிலிருந்து நடிகர் எம் ஜீ இராமச்சந்திரனால் உருவாக்கப்பட்ட  அண்ணா திராவிட  முன்னேற்ற கழகம், இந்த இரு வாக்கு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தமிழ் நாட்டை தமது பூர்வீகமாக கொண்டவர்கள் அல்ல என்பது புதிதாக எழுந்த தமிழ் தேசிய வாதிகளின் பார்வையாகும் .

இந்த வியாக்கியானங்கள் ஈழத்தமிழர் ஆயுதப்போராட்ட காலத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்திருக்கவில்லை.  ஆனால்  ஈழத்தமிழர் போராட்டத்தை புது டெல்லி தலைமைகள் என்றும் மத வாத போக்கை முன் நிறுத்தியே கையாண்டன.

இந்திரா காங்கிரஸ் கட்சி யாயினும் சரி பாரதீய ஜனதா கட்சி ஆயினும் இரு கட்சிகளும் மாறி மாறி இந்துத்துவ பிராமணீய மேலாண்மை கோட்பாட்டை அடிப்படையாக கொண்டே ஈழப்போராட்டத்தை கையாண்டன என்பது இங்கே குறிப்பிட த்கக்கதாகும்.

தமிழ் மக்களுக்கு என்ற ஒரு அரசு தெற்காசியாவில் அமைந்தால் இந்துத்துவ பார்ப்பணீய மேலாண்மை வலுவிழந்து போய்விடும் என்பது புது டெல்லி அரச கொள்கை பகுப்பாளர்கள்,  வெளியுறவு மற்றும்  பாதுகாப்பு திணைக்கள் அதிகாரிகளின் பார்வையாகும்.

இன்று வரை புது டெல்லி இதே கொள்கை வடிவமைப்பையே கொண்டுள்ளது என்பது முக்கியமானதாகும். இதனால் தமிழ் நாட்டில் திராவிட எதிர்ப்போக்கை கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் அரசியல் நலன்கள் கருதி டெல்லி கட்சிகள் தமிழ் நாட்டு கட்சிகளுடன் கூட்டுகள் வைத்து கொள்கின்றன.

இரு திராவிட கட்சியிலும் மத நம்பிக்கை என்பது அவரவர் உரிமை என்ற வரையறைகளை கடைப்பிடித்து வருகிண்றனர். ஆனால் அதன் தாய்கட்சியான திராவிடர் கழகம் அதிக ஆதரவை திமுகவுக்கு கொடுத்து வருகிறது.  இதனால்  திராவிடர் கழகம் திமுகவின் ஒரு பின்புல பிரச்சார தளமாகவும் மக்கள் மத்தியில் மறைமுகமான சில நேரங்களில் நேரடியான சிபாரிசு செய்யும் பரப்புரை சக்தியாகவும் செயல்படுகிறது.

அதே வேளை அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வேறுபட்ட கோணத்திற்க இன்று சென்று விட்டது எனலாம் . இன்றைய சர்வதேச அரசியலில் நடைமுறையில் இருக்கும் ஜனரஞ்சகவாத அரசியல் தத்துவத்திற்கு அடிப்படையாக இருந்தவர் எம் ஜீ இராமச்சந்திரன் அவர்கள்.  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அவரினால் உருவாக்கப்பட்டது தான் .

அக்கட்சி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கைப் போக்கை தமது அடிப்படை யாக கொண்டிருந்தது.  இந்த கொள்கை  அறிஞர் அண்ணாவினால் உருவாக்கப்பட்டது என்று எம் ஜீ ஆரினால் கூறப்பட்டது. இருந்து போதிலும் மத வேறுபாட்டை எதிர்ப்பவராக எம் ஜீஆர் இருந்தார். இன்று அவரது கட்சி மத  நம்பிக்கை எதிர்ப்புவாத போக்கிலிருந்து முற்றிலுமாக வெளியேறி விட்டது மட்டுமல்லாது சமூக ஏற்றத்தாழ்வு  அடிப்படைகளில் இருந்தும் வெளியேறி விட்டது என பல தமிழ் நாட்டு அரசியல் ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.

அதே வேளை தமிழ் தேசிய வாத போக்கை கொண்டவர்களும் மத நம்பிக்கையை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.  ஆனால் மக்கள் மத்தியிலே சாதீய ஒடுக்க முறைக்கு எதிரானவர்களாகவும் இந்து மத மேலான்மைக்கு எதிரானவர்களாகவுமே அனைத்து தமிழக கட்சிகளும் கூறி வருகின்றனர்.

இதனால் பெரியாருடைய சிந்தனைகள் ஆழவேரூன்றி விட்ட  தமிழ் நாட்டில் சமய சார்பாக கட்சிகள் உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதிக்கம் செலுத்தவது மிகவும் கடினமான ஒரு விடயமாக உள்ளது. இருந்த போதிலும் சாதீயத்தின் பெயரால் அரசியல் செய்வது இன்னமும் இலகுவான ஒரு காரீயமே.

இதனால் தமிழ் நாட்டு அரசியல் சமூக பண்பாட்டு விவகாரங்களில் ஒவ்வொரு விடயத்திலும் திராவிட பின்புலமோ அல்லது இந்து பார்ப்பணீய மேலாதிக்கவாத பின்புலமோ அடங்கி இருக்கும் தன்மையை புரிந்து கொள்வது அவசியமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *