மேலும்

காங்கேசன்துறை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவைக்கு சிறிலங்கா ஆர்வம்

இந்திய துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதில், சிறிலங்கா துறைமுக அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் தலைவர் கவன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 480 மில்லியன் டொலர் கொடை பெறுவதற்கு அமைச்சரவைப் பத்திரம்

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியத்திடம் இருந்து 480 மில்லியன் டொலர் கொடையைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம்,  ஜூலை 22ஆம் நாளுக்குள்  அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உச்சநீதிமன்ற விளக்கத்தைக் கோரும் முடிவைக் கைவிட்டார் மைத்திரி

தனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு சேவை நீடிப்பு

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  ஒரு ஆண்டு சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.

கட்டுநாயக்கவில் தரையிறங்கியுள்ள அமெரிக்க சரக்கு விமானம்

அமெரிக்க சரக்கு விமானம் ஒன்று நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வெஸ்ரேன் குளோப் எயர்லைன் நிறுவனத்துக்கு சொந்தமான மக் டோனல் டக்ளஸ் 11 விமானமே, நேற்று அதிகாலை 3.47 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

‘சோபா’வை எதிர்க்கும் சிறிலங்கா – உன்னிப்பாக கவனிக்கும் புதுடெல்லி

அமெரிக்கப் படைத்தளத்தை அமைப்பதற்கு அனுமதியளிக்கக் கூடிய, அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, சிறிலங்காவில் அதிகரித்து வரும் எதிர்ப்புகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக, புதுடெல்லியில் இருந்து வெளியாகும் ‘எகொனமிக் ரைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டமைப்பு எம்.பிகளுக்கு 50 மில்லியன் ரூபா அபிவிருத்தி நிதி?

தனியான கல்முனை பிரதேச செயலகத்தை அமைத்து தருவதாக சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிக்கு அமையவே, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னைய ஆட்சியில் தகுதியற்ற இராஜதந்திரிகள்

அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட முக்கியமான 8 நாடுகள் உள்ளிட்ட 26 நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில், ஒன்பது நாடுகளில் இருந்த தூதுவர்கள் மாத்திரமே, துறைசார் இராஜதந்திரிகளாக இருந்தனர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகளின் சாட்சியம் ஜூலை 24இற்கு ஒத்திவைப்பு

அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் உள்ளிட்ட உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

27 வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சற்று முன்னர், 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.