மேலும்

பிரிவு: செய்திகள்

வடக்கில் இராணுவம் சாரா செயற்பாடுகளை மட்டுப்படுத்தி விட்டதாம் சிறிலங்கா இராணுவம்

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றல், மீள்குடியமர்வு தொடர்பான கட்டுமானம், மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தி போன்றவற்றுக்கு மட்டும், தமது பணிகளை மட்டுப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

வட, கிழக்குத் தமிழர்கள் வாக்குகளை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் – சம்பந்தன் அழைப்பு

தமிழரின் இலட்சியத்தை விரைவில் அடைவதற்கு, அடுத்தமாதம் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் தாயகத்தில் உள்ள  அனைத்துத் தமிழ்மக்களும் தமது வாக்குகளை ஆயுதமாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

சீன – அமெரிக்க – இந்திய உறவுகளின் பண்புகள் – ‘தாராள சனநாயக அரசியல் சமுத்திரத்தில் நீந்தக் கற்றல்’

எந்த உலக தலைவர்கள் இலங்கைத்தீவிற்கு சென்றாலும் இரு நிர்வாக அலகுகளாக கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் கையாளுவது கவனிக்கத்தது. சர்வதேச இராசதந்திர விதிமுறைகளின் கீழ் யாழ்ப்பாணத்துக்கு சமகௌரவம் தரப்படுவது, சர்வதேச செல்வாக்கை பெறுவதற்கு உரிய திறவுகோலாக தமிழ் தலைமைத்துவம் எடுத்து கொள்வதில் தவறேதுமில்லை – புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி.

மைத்திரியின் அணிவகுப்புக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் ரவை – பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த கடெற் மாணவரின் துப்பாக்கியில், ரவை ஒன்று சிக்கியிருந்ததை, சிறிலங்கா அதிபரின் பாதுகாப்புப் பிரிவினர் கண்டறிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்தவின் விரல்களை நசித்தவர் மன்னிப்புக் கோரினார்

அக்குரஸ்ஸவில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஆவேசமடையக் காரணமாக இருந்தவர், தனது செயலுக்காக நேற்று மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஐந்து மத்திய குழு உறுப்பினர்களை நீக்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீவிர முயற்சி

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் ஐந்து பேரை, மத்திய குழுவில் இருந்து விரைவில் நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் தேர்தலை இடைநிறுத்தக் கோரிய வழக்குத் தள்ளுபடி

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள்  நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இடைநிறுத்தக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

அம்பாந்தோட்டையில் கப்பல்கட்டும் தளத்தை அமைக்க சீனா திட்டம்- சிறிலங்கா பச்சைக்கொடி

அம்பாந்தோட்டை துறைமுகத்தில், கப்பல் கட்டும் மற்றும் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளத்தை அமைப்பது தொடர்பான சாத்திய ஆய்வை சீன நிறுவனம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையின் உள்ளடக்கம் என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடவுள்ள தேர்தல் அறிக்கையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு, படைவிலக்கம் உள்ளிட்ட போருக்குப் பிந்திய மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கான தீர்வு, பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தேசியக்கொடியை தீயிட்டு எரிக்க வேண்டும் – வட்டரகே விஜித தேரர்

சிறிலங்காவின் தேசியக்கொடி தீயிட்டு எரிக்கப்பட வேண்டும் என்று, நவ சம சமாஜக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர், வண.வட்டரகே விஜித தேரர் தெரிவித்துள்ளார்.