பேரெழுச்சி கண்டது செம்மணி – அணையா விளக்கு போராட்டத்தில் குவியும் மக்கள்
செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரியும்- சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு போராட்டம் பேரெழுச்சியுடன் இடம்பெற்று வருகிறது.
செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரியும்- சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு போராட்டம் பேரெழுச்சியுடன் இடம்பெற்று வருகிறது.
சிறிலங்காவில் போரின் போது நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் இல்லாதொழிக்கப்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் சிறிலங்கா அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.
சிறிலங்கா அதிபராக ரணில் விக்கிரமசிங்க இருந்த போது வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் குறித்து, விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையிலான சர்வதேச விசாரணைக்கு வழிசெய்யுமாறு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்திப்பதற்கு, போர்க்குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்கா படை அதிகாரிகள் குழுவொன்று முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம்- செம்மணியில் அணையா விளக்குப் போராட்டம் இரவிரவாக இடம்பெற்று வருகிறது.
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி, முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் தீப்பந்தம் ஏந்திய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிறிலங்காவுக்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ள அவுஸ்ரேலிய அரசாங்கம், அதிகளவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.