மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சிதம்பரத்துக்கு யாத்திரிகளை அனுப்ப கப்பலைத் தேடும் ஆளுனர்

தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் மார்கழித் திருவாதிரைத் திருவிழாவில் பங்கேற்பதற்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.

மீண்டும் ஐதேகவில் இணைகிறார் ரம்புக்வெல?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ளவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

உள்ளூராட்சித் தேர்தல் – இரண்டாவது கட்டத்தில் 1553 வேட்புமனுக்கள் ஏற்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இரண்டாவது கட்டமாக 1553 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேயிலை இறக்குமதி தடை – மாத இறுதியில் சிறிலங்காவுடன் பேச ரஷ்யா திட்டம்

சிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதித்த தடை குறித்து, சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

கடைசிநேரம் வரை காத்திராமல் வேட்புமனுக்களை சமர்ப்பியுங்கள் – தேர்தல் ஆணையாளர் கோரிக்கை

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை காலதாமதம் செய்யாமல் விரைவாகத் தாக்கல் செய்யுமாறு அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடம் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு சிறிலங்காவில் இடமில்லை – என்கிறார் மைத்திரி

உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்புபட முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

50 சீன இணையர்களுக்கு கொழும்பில் திருமணம் – சிறிலங்கா அரசே நடத்தி வைத்தது

50 சீன இணையர்களுக்கு நேற்று கொழும்பு நகரசபை மைதானத்தில் பிரமாண்ட திருமண விழா இடம்பெற்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த திருமணவிழாவில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தேயிலை இறக்குமதி தடையை நீக்குமாறு ரஷ்ய அதிபரிடம் கோரவுள்ளார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்துள்ள தடையை நீக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் கோரவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வந்தார் மலேசியப் பிரதமர்

மலேசியப் பிரதமர் அப்துல் நஜீப் ரசாக் மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை சிறிலங்காவை வந்தடைந்தார். சிறப்பு விமானம் மூலம், மலேசியப் பிரதமர் இன்று காலை 8.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இன்று கொழும்பு வருகிறார் மலேசியப் பிரதமர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் மலேசியப் பிரதமர் டத்தோ சிறி மொகமட் நஜிப் பின் துவான் அப்துல் ரசாக் மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ளார்.