மேலும்

தேயிலை இறக்குமதி தடையை நீக்குமாறு ரஷ்ய அதிபரிடம் கோரவுள்ளார் சிறிலங்கா அதிபர்

maithri-putinசிறிலங்காவின் தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்துள்ள தடையை நீக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் கோரவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதியில் வண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இந்த முடிவு சிறிலங்காவுக்குப் பொருளாதார ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அடுத்தவாரம் மூன்று அமைச்சர்களை மொஸ்கோவுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேவேளை, ரஷ்ய அதிபரிடம் தாம் அதிகாரபூர்வமான முறையில் தேயிலை இறக்குமதிக்கான தடையை நீக்குமாறு தாம் கோரவுள்ளதாக சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *