மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

மகிந்தவுக்காக கையெழுத்திடாமல் நழுவினார் பௌசி – மைத்திரியின் பிரதமர் வேட்பாளரா?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், தமக்குப் பிரதமர் பதவி வேண்டாம் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் முக்கிய ஆலோசனை – சிறிலங்காவுக்கான தூதுவர் பதவியேற்பு

சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக, அதுல் கெசாப்  நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த நிகழ்வில் அவர், பதவியேற்பு உறுதியுரை எடுத்துக் கொண்டார்.

நெற்களஞ்சியமாகிறது மத்தல விமான நிலையம்?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் அவரது சொந்த இடமான அம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட, சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக மாற்றப்படக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர்களைக் குழப்பியுள்ளார் விக்னேஸ்வரன் – ‘தினக்குரல்’ ஆசிரியர் கருத்து

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை வாக்காளர்களைக் குழப்பும் வகையில் அமைந்துள்ளதாக, கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

பிரகீத்தை கடத்துவதற்கு முன்னாள் புலிகளை தந்திரமாகப் பயன்படுத்திய சிறிலங்கா இராணுவம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு பல நாட்களாக கிரிதல இராணுவ முகாமில் வைத்து விசாரணை செய்யப்பட்ட பின்னரே காணாமற்போகச் செய்யப்பட்டுள்ளார் என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொமாண்டோ படைப்பிரிவில் இருந்து நீக்கப்பட்டார் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா

மீரிஹானவில் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய வெள்ளை வான் தொடர்பான விசாரணைகளில் சிக்கியுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மைத்திரியின் பாதுகாப்பை பொறுப்பேற்றது சிறப்பு அதிரடிப்படை – புதிய சீருடையும் அறிமுகம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு நேற்றுக் காலை தொடக்கம் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

தனது சுயசரிதையில் மகிந்தவின் திருகுதாளங்களை அம்பலப்படுத்தப் போகிறார் சந்திரிகா

போரை வெற்றி கொண்டது தானே என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உரிமை கோர முடியாது என மற்றொரு முன்னாள் அதிபரான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டது

சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவு (Presidential Security Division – PSD) முற்றாக கலைக்கப்பட்டுள்ளதாக பொது ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் அதிபர் பாதுகாப்புப் பிரிவு ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினருக்கு வாய்ப்பூட்டு – கிரிசாந்த டி சில்வா கடும் உத்தரவு

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுவதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தடைவிதித்துள்ளார். இது தொடர்பாக அவர் படையினருக்கு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.