மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மைத்திரி கொடுத்த விருந்து

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபருக்கும், புதிதாகத் தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா அதிபர் நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார்.

சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன், இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சு

இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலாநிதி அர்விந்த் குப்தா, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பி.எம்.யூ.டி.பஸ்நாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற கணவன் – மனைவி

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 35 ஆண்டுகளுக்குப் பின்னர், கணவனும் மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்ட நிகழ்வு இன்று இடம்பெற்றது.

பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்கிறார் சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், மோட்டார் குண்டு அல்லது ஷெல் ஒன்றின் சிதறல் தாக்கியே மரணமாகியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு நாளை ஆரம்பம் – கொழும்பு வந்தார் ஹமீத் கர்சாய்

சிறிலங்கா இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் இன்று பிற்பகல் கொழும்பு வந்துள்ளார்.

புதிய கூட்டணியை உருவாக்க மகிந்த ஆதரவு அணி முயற்சி – உடைக்க முனைகிறார் மைத்திரி?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடி வருவதாக, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய அதிபர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மூவர் கைதாகின்றனர்

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ள, சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் மூவர் கைது செய்யப்படவுள்ளனர்.

செப்ரெம்பர் 17இல் முதலாவது முறைசாரா கூட்டத்தை ஜெனீவாவில் கூட்டுகிறது அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஒன்றை முன்வைப்பது தொடர்பான முதலாவது முறைசாரா கூட்டத்தை அமெரிக்கா வரும் செப்ரெம்பர் 17ஆம் நாள் ஜெனீவாவில் நடத்தவுள்ளது.

கதிர்காமர் கொலை குறித்து புதிய விசாரணை – குடும்பத்தினர் கோரிக்கை

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக, புதிய விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று கதிர்காமரின் மகள் அஜிதா மற்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கவுள்ளனர்.

போரில் உடல்உறுப்பை இழந்து நாடாளுமன்றம் செல்லும் முதல் உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா

சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 63 புதுமுக உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறீஸ்கந்தராஜா, போரினால் உடல் உறுப்பினை இழந்த முதல் நபராக நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிக்கவுள்ளார்.