மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியாவின் ஆதரவைக் கோருகிறார் சம்பந்தன்

ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

ஐ.நா விசாரணை அறிக்கை சிறிலங்காவிடம் கையளிப்பு – அடுத்தவாரம் பகிரங்கமாகும்

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கையின் அதிகாரபூர்வ பிரதி ஒன்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் ரஷ்ய இராஜதந்திரியை தாக்கிய வாகனச் சாரதி – காணொளியால் பரபரப்பு

கொழும்பில் உள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில், ரஷ்ய இராஜதந்திரி ஒருவர் வாகனச் சாரதியால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வார இறுதியில் இடம்பெற்றுள்ளது.

அனைத்துலக நீதிமன்ற விசாரணையையே கோருகிறது கூட்டமைப்பு – மாவை சேனாதிராசா விளக்கம்

இன்னொரு அனைத்துலக விசாரணை தேவையில்லை, போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக நீதிமன்ற விசாரணையே தேவை என்பதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

சீனாவைத் தொடர்ந்து பாதுகாப்பு நாளைக் கொழும்பில் கொண்டாடியது பாகிஸ்தான்

சீனாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் சிறிலங்காவில் தனது பாதுகாப்பு நாளை பிரமாண்டமான முறையில் கொண்டாடியுள்ளது. பாகிஸ்தானின் 50ஆவது  பாதுகாப்பு நாள் நேற்று கொழும்பில் கொண்டாடப்பட்டது.

போரின் இறுதியில் ஆட்டிலறிகளைப் பயன்படுத்தியது உண்மை – ஒப்புக்கொண்டார் சரத் பொன்சேகா

போரின் இறுதிக்கட்டத்தில் இழப்புக்களைத் தவிர்ப்பதற்கு, சிறிலங்காப் படையினர்  ஆட்டிலறிகளையும் மோட்டார்களையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

மகிந்தவைத் தோற்கடிக்க உதவியது ரோ அல்ல வைபர் – இரகசியத்தை உடைத்தார் சந்திரிகா

வைபர் (viber) தொலைபேசி அழைப்புகளின் மூலமே, மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கான சக்திகளை ஒன்று திரட்டியதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

சீனாவின் ஆதரவு இல்லையென்றால் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது – சரத் பொன்சேகா

30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுடன் நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சிறிலங்காவுக்கு சீனா வழங்கிய ஆதரவை மறந்து விட முடியாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

வரும் 14ஆம் நாள் இந்தியா செல்கிறார் ரணில் – முக்கிய விவகாரங்கள் குறித்து பேசுவார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் 14ஆம் நாள் தொடக்கம் 16ஆம் நாள் வரை இந்தியாவுக்கு, தனது முதல் அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட்டின் உயர் அதிகாரிகள் சிறிலங்காவில் – அரசதரப்பு, கூட்டமைப்புடன் சந்திப்பு

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் இரண்டு மூத்த அதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பேச்சுக்களை நடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது.