மேலும்

சமந்தா பவருடன் மங்கள சமரவீர பேச்சு – அனைத்துலக ஆதரவை கோரினார்

mangala-samantha (1)மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இந்தப் பேச்சுக்கள் இன்று மாலை இடம்பெற்றன.

இந்தப் பேச்சுக்களின் முடிவில் சமந்தா பவருடன் இணைந்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதன் போது அவர், ” சமந்தா பவர் எப்போதும் சிறிலங்காவின் நண்பனான இருப்பார்.

நெருக்கடியான வேளைகளில் கூட, அவர் உண்மையை பேணிக் கொண்டதுடன் இந்த நாட்டின் மீது நம்பிக்கையையும் வைத்திருந்தார்.

mangala-samantha (2)mangala-samantha (1)

அனைத்துக் குடிமக்களின் மனித உரிமைகளையும் உறுதிப்படுத்தும், ஜனநாயகப் பயணத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.

நாம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துப் பேசியுள்ளோம்.

நாங்கள் ஒரு சவாலான பாதையைத் தெரிவு செய்துள்ளோம். நாம் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எமக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவு தேவை.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *