மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஜே.எவ்-17 போர் விமானங்களை கொள்வனவு செய்யுமாறு சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் அழுத்தம்

ஜே.எவ்-17 போர் விமானங்களை விற்பனை செய்வது தொடர்பாக, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழுத்தங்களைக் கொடுப்பார் என்று லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல பாதுகாப்பு ஊடகமான ஐஎச்எஸ் ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி செய்தி வெளியிட்டுள்ளது.

பிரகீத் கடத்தல் – மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரியும் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த மற்றொரு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பெப்ரவரிக்கு முன் சிறிலங்கா வருவார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா இராணுவம் மீது சைபர் தாக்குதல்

சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது நத்தார் நாளன்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத குழுவொன்று, சிறிலங்கா இராணுவ இணையத்தளத்துக்குள் புகுந்து, அதிலிருந்த தகவல்களைச் சி்தைக்க முயன்றது.

மேஜர் ஜெனரல் ஜெகத் டயசின் பதவியைப் பிடிக்க சிறிலங்கா இராணுவத்துக்குள் பனிப்போர்

சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவியான, இராணுவத் தலைமை அதிகாரி பதவியைப் பிடிப்பதில், மூத்த இராணுவ அதிகாரிகளுக்குள் பனிப்போர் மூண்டுள்ளது.

அமெரிக்காவினுள் நுழைய சரத் பொன்சேகா பகீரத பிரயத்தனம் – கிறீன் கார்ட்டை புதுப்பிக்க விண்ணப்பம்

அமெரிக்கா செல்வதற்கு நுழைவிசைவு மறுக்கப்பட்ட நிலையில், வதிவிடஉரிமை (கிறீன் காட்) அட்டைக்கு சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீள விண்ணப்பித்துள்ளார்.

கொழும்பில் சம்பந்தன் – விக்னேஸ்வரன் சந்திப்பு – 3 மணிநேரம் பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று மாலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நாளையுடன் ஓய்வு

போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளதாக திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரகீத் கடத்தலில் தொடர்புடைய இராணுவப் புலனாய்வாளர்களை வெலிக்கடையில் சந்தித்தார் மகிந்த

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் விவகாரம் – சிறிலங்காவுக்கு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமும் அழுத்தம்

சிறிலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், நல்லிணக்கம் மற்றும் நம்பகமான இடைக்கால நீதிப் பொறிமுறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், சிறிலங்கா அரசாங்கத்திடம் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களமும் வலியுறுத்தியுள்ளது.