மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

பசிலுடன் முரண்பாடுகள் உள்ளன – ஒப்புக்கொள்கிறார் நாமல்

பசில் ராஜபக்ச விடயத்தில் தாமும் விமர்சனங்களைக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஜனநாயகத்தின் வெற்றிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது- ஜோன் கெரி

சிறிலங்காவில் ஜனநாயகத்தின் வெற்றிக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

மலையகத் தமிழர்களை ராஜபக்ச அரசுக்கு எதிராகத் திருப்பிவிட்டது ‘ரோ’ தான் – கோத்தா

மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, மலையகத் தமிழர்களின் வாக்குகளை திசைதிருப்பி விட்டது இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘ரோ’ தான் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் நியமனம் – பொன்சேகாவுக்கு மைத்திரி கொடுத்த பதிலடி

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்குப் பதில் நடவடிக்கையாகவே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தலுக்குப் பின் அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாது – சிறிலங்கா நம்பிக்கை

அமெரிக்காவில் வரும் நொவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலின் பின்னர், சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார், அமெரிக்காவுக்கான சி்றிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம்.

முதலமைச்சர் எதிர்த்தாலும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படுமாம்

வடக்கு மாகாண முதலமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்று, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கேட்கிறது சீனா

அம்பாந்தோட்டையில் சிறப்பு முதலீட்டு வலயத்தை உருவாக்குவதற்கு, ஆயிரம் ஏக்கர் நிலத்தை தர வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

குடாநாட்டு மக்களை மிரள வைத்த மிக் போர் விமானங்கள் – வழக்கமான பயிற்சி என்கிறது விமானப்படை

சிறிலங்கா விமானப்படையின் ஜெட் போர் விமானங்கள் கடந்தவாரம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீது பறந்து, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை  ஏற்படுத்திய நிலையில், அது ஒரு வழக்கமான பயிற்சி நடவடிக்கை என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

முடிவடைந்தது பிரகீத் கடத்தல் விசாரணை – கைது செய்யப்படுகிறார் கோத்தா?

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தக் கடத்தலுக்கு உத்தரவிட்ட முன்னைய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் மங்கள சமரவீரவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்கா இராணுவத்தினரின் கீழ்ப்படியாமை நிலையை எதிர்கொள்ள நேரிட்டதாக, எக்கொனமி நெக்ஸ்ட் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.