பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்குகிறது சிறிலங்கா – குழப்பத்தில் இந்தியா
இந்தியாவின் அழுத்தங்களுக்கு மத்தியில், பாகிஸ்தானிடம் இருந்து எட்டு, ஜே.எவ்-17 போர் விமானங்களை வாங்கும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டு வருகின்றன.


