நீண்டநேரம் நடந்த அமெரிக்க – சிறிலங்கா கூட்டு கலந்துரையாடல்
அமெரிக்க- சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜோர்ஜ் மார்ஷல் கருத்தரங்க மண்டபத்தில் நேற்று- வெள்ளிக்கிழமை- இடம்பெற்றது.
அமெரிக்க- சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜோர்ஜ் மார்ஷல் கருத்தரங்க மண்டபத்தில் நேற்று- வெள்ளிக்கிழமை- இடம்பெற்றது.
சீனக் கடற்படையின் மிகப்பெரிய மருத்துவமனைக் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு இன்று வந்துள்ளது. சீனக் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த போது, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
இராணுவமய நீக்கம் என்பது நல்லிணக்கத்தின் முக்கியமான ஒரு பகுதி என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டுள்ளார்.
அச்சமான அரசியல் சூழலை சிறிலங்கா மக்கள் ஒன்றுபட்டு நிராகரித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்.
சிறிலங்காவில் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் திறந்த நிலையிலேயே இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகளை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பாராட்டியுள்ளார்.
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம், குற்றவியல் சட்டத்தின் 296ஆவது பிரிவின் கீழ், கொலை போலத் தோன்றுவதாகத் தெரிவித்துள்ள கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ், சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி, மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையேற்றல் பிரிவின் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் ஜி.எஸ்.பப்பி சிறிலங்கா கடற்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா விவகாரம் தொடர்பாக, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவருடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பேச்சுக்களை நடத்தினார்.