மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

பனாமா ஆவணங்களில் சிக்கினார் கோத்தாவின் கூட்டாளி மேஜர் நிசங்க சேனாதிபதி

வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்களில் இடம்பெற்றுள்ளவர்கள் பற்றிய மற்றொரு தொகுதி பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், சிறிலங்காவில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நெருங்கிய சகாவான நிசங்க சேனாதிபதியின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் புலிகளை வைத்து சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை ஆடும் மோசமான விளையாட்டு

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கைது மற்றும் கடந்தகாலத்தில் இடம்பெற்ற இரகசிய இராணுவ செயற்பாடுகள், குற்றச்செயல்கள் குறித்த விசாரணைகள் காரணமாக, சிறிலங்கா இராணுவத்துக்கும், காவல்துறைக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சத்ஹண்ட சிங்கள வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

எசல வீரக்கோனுக்கு வெளிவிவகாரச் செயலர் பதவி – பின்னணிக் காரணம் வெளியானது

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், இடைக்கால நீதிச் செயல்முறை மற்றும் ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக  கூட்டாளிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான தேவைகளைக் கருதியே, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராக எசல வீரக்கோன் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் ஆயுதப்படைகள், காவல்துறையை மறுசீரமைக்க வேண்டும்- ஐ.நா நிபுணர்

சிறிலங்காவின் முக்கிய துறைகளான ஆயுதப்படைகள், காவல்துறை,  சட்டமா அதிபர் திணைக்களம், மற்றும் நீதித்துறை என்பன மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்று, ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் மைத்திரி- மோடி சனிக்கிழமை சந்திப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில். எதிர்வரும் 14ஆம் நாள், சனிக்கிழமை சந்திப்பு இடம்பெறவுள்ளது. புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று சிறிலங்கா அதிபர் செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சிறிலங்காவில் சித்திரவதைகள் தொடர்கின்றன- ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் குற்றச்சாட்டு

சிறிலங்காவில் இப்போதும் சித்திரவதைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக, ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தின் நான்கு மேஜர் ஜெனரல்கள் பசில் ராஜபக்சவுடன் இரகசிய சந்திப்பு

சிறிலங்கா இராணுவத்தில் சேவையில் உள்ள நான்கு மேஜர் ஜெனரல்களும், ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவைச் சந்தித்துள்ளதாக, ராவய சிங்கள வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

நைஜீரியாவுக்கு 9 ரோந்துப் படகுகளை விற்பனை செய்தது சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா கடற்படை உள்நாட்டில் தயாரித்த, ஒன்பது கரையோர ரோந்துப் படகுகளை நைஜீரியாவுக்கு விற்பனை செய்துள்ளது. வெலிசறையில் உள்ள படகு கட்டுமான தளத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில், நைஜீரியத் தூதுவர், அகமட்டிடம், சிறிலங்கா கடற்படை அதிகாரிகளால் இந்தப் படகுகள் கையளிக்கப்பட்டன.

சிறிலங்கா மீதான தடையைத் தளர்த்தியது அமெரிக்கா

சிறிலங்கா மீதான நீண்டகால இராணுவத் தளபாட வர்த்தகத் தடையை அமெரிக்கா தளர்த்தியுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், பாதுகாப்பு வர்த்தக கட்டுப்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் மானவடு இறந்த செய்தி அறிந்ததும் அவரது இல்லத்துக்கு ஓடினார் மகிந்த

மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணமான செய்தியைக் கேள்வியுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உடனடியாக, அவரது வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்துள்ளார்.