சிறிலங்கா விவகாரத்தில் மீண்டும் எரிக் சொல்ஹெமுக்கு இடமில்லை – மங்கள சமரவீர
சிறிலங்கா விவகாரத்தில் நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா விவகாரத்தில் நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவில் ஆயுதப் போட்டி வலுப்பெற்றிருப்பதாகவும், கடந்த சில ஆண்டுகளில் சிறிலங்காவும் கூட, 2.2 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை இறக்குமதி செய்திருப்பதாகவும், ஸ்ரொக்ஹோம் அனைத்துலக அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது சகோதரரான மகிந்த ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையில், தாம் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்திருப்பதாக, தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு தனியே உள்நாட்டுப் பொறிமுறையை அமைப்பது மட்டும் போதுமானதல்ல, அது விசாரணை செய்யவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் அதிகாரம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று அமெரிக்க செனட்டர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் தடையை மீறி பனாமா கப்பல் ஒன்றின் மூலம், சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு மில்லியன் பரல் ஈரானிய எண்ணெயைக் கொள்வனவு செய்துள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
சீனாவுக்கான தனது பயணம், சீன – சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்காவில் ஊடகங்களின் நிலை குறித்து மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இந்த வாரம் கொழும்பு வரவுள்ளார்.
சிறிலங்காவுடன் தொடர்ச்சியானதும் நிலையானதுமான இராணுவ உறவுகள் தொடர வேண்டும் என்று சீனப் பாதுகாப்பு அமைச்சர் சாங் வான்குவான் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தவும், ஆதாரப்படுத்தவும் வசதியாக கைத்தொலைபேசி செயலி ஒன்று (mobile phone app) நேற்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் யாழ்ப்பாணத்திலும், ஐரோப்பாவிலும் இயங்கும் டான் தொலைக்காட்சியின் பணிப்பாளர் எஸ்.என்.குகநாதன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.