மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்காவின் புதிய பாதை அமெரிக்காவுக்கு கிடைத்த வரம் – இராஜாங்கத் திணைக்கள அதிகாரி

நல்லாட்சியை ஊக்குவிக்கவும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கும் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவும் என்றும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு அழைப்பு

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும், அதிபர் ஆணைக்குழு, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

நடுக்கடலில் 54 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா

இந்தோனேசியாவில் இருந்து 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேருடன் சென்ற அகதிகள் படகு ஒன்றை அவுஸ்ரேலிய சுங்கத் துறையினர் நடுக்கடலில் வழி மறித்து, திருப்பி அனுப்பியுள்ளனர். இந்தோனேசிய காவல்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி சிட்னி மோர்னிங் ஹெரோல்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக பயிலரங்கில் சிறிலங்காவும் பங்கேற்பு

பிரான்சின் லியோன் நகரில் இன்று ஆரம்பமாகும், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஐந்து நாள் அனைத்துலக பயிலரங்கில் சிறிலங்காவும் பங்கேற்கவுள்ளது.

மகிந்தவின் பெறாமகன் உதயங்க வீரதுங்க டுபாய் விடுதியில் – கொழும்பு ஆங்கில வாரஇதழ்

சிறிலங்காவினால் தேடப்பட்டு வரும், ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாயில் தங்கியிருப்பதாக, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நான்கு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் சிங்கப்பூரில் பேச்சு நடத்தியது சிறிலங்கா குழு

சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, இந்தியா, பிரித்தானியா, தாய்லாந்து, சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

மகிந்த அரசின் ஊழல்கள் குறித்த விசாரணைகள் தீவிரம் – அமெரிக்க அதிகாரிகள் உதவிக்கு வருகை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், சிறிலங்கா அதிகாரிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்க அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா விருப்பம்

ஒரு சீனா என்ற கொள்கையையும், தென் சீனக் கடல் விவகாரத்தில், சீனாவின் நிலைப்பாட்டையும் முழுமையாக ஆதரிப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன சீனப் பாதுகாப்புத் தரப்பிடம் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க ஆய்வு நிறுவன அறிக்கையை மறுக்கிறது சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்காவில் போருக்குப் பின்னரும், சிறுபான்மையினர் மீது மௌனப் போர் தொடர்வதாக அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது.

சிறிலங்கா- சீன பாதுகாப்பு உயர்மட்டக் குழுக்கள் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு

சிறிலங்கா- சீன பாதுகாப்பு உயர்மட்டக் குழுக்கள் நேற்று சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளன. சங்கிரி லா கலந்துரையாடல் எனப்படும், 14வது ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் பக்க நிகழ்வாகவே இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.