மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

மகிந்தவின் ஆட்சியில் எனக்கும் அநீதி இழைக்கப்பட்டது – அண்ணன் சமல் புலம்பல்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தனக்கும் அநீதி இழைக்கப்பட்டதாக, பொதுக்கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக புலம்பியிருக்கிறார் சிறிலங்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச.

எதிரணி மீது கோத்தா ஆவேச பாய்ச்சல்

தீவிரவாதிகள் அரசியலில் ஈடுபடும் போது, அரச படையினர் அரசியலில் ஈடுபட்டால் என்ன என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

புதுடெல்லியில் உயர்மட்டப் பேச்சுக்களில் சம்பந்தன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவின் பல்வேறு உயர்மட்டப் பிரமுகர்களுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அமைச்சர் குத்துக்கரணம் – அமெரிக்க தூதுவர் சலுகைகளை வழங்க முன்வரவில்லையாம்

அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுவதற்கு, அமெரிக்கத் தூதுவராக இருந்த மிச்சேல் ஜே சிசன் தனக்கு இலஞ்சம் தர முயற்சிக்கவில்லை என்று, குத்துக்கரணம் அடித்துள்ளார், சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன்.

ஐ.நா அறிக்கை கிலியில் சிறிலங்கா – இப்போதே சட்டவல்லுனர்களைத் தயார்படுத்துகிறது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள சிறிலங்கா குறித்த அறிக்கையை எதிர்கொள்வது குறித்து உலகிலுள்ள மிகப் பிரபலமான சட்டவல்லுனர்களுடன் சிறிலங்கா தொடர்பு கொண்டுள்ளது.

சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்துக்கு பிரித்தானியா ஆதரவு – இரகசிய ஆய்வையடுத்து முடிவு

சிறிலங்காவில் ஆட்சிமாற்ற ஏற்படுவதற்கு பிரித்தானியாவின் ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“தோல்வியுற்றால் ஆட்சியை ஒப்படைத்து விடுவேன்” – ஆயர்களுக்கு மகிந்த வாக்குறுதி

அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றால், எந்த தயக்கமும் இன்றி அதிகாரத்தை ஒப்படைத்து விடுவேன் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கத்தோலிக்கத் திருச்சபைக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

புலியின் குகையாக இருந்த யாழ்ப்பாணம் இப்போது குற்றத்தின் மையம்?

போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பது குறித்து நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர். சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்று அறியப்பட்ட இடம், இன்று குற்றவாளிகளும், சட்டத்தை மீறுவோரும் மகிழ்ச்சியாக வேட்டையாடும் இடமாக மாறியுள்ளது.

மகிந்தவை ஆதரிக்கும் அதிகாரிகள் மீது வெளிநாட்டு பயணத்தடை – எதிரணியின் கிடுக்கிப்பிடி

தேர்தல் விதிமுறைகளை மீறி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகச் செயற்படும் அரசாங்க மற்றும் இராணுவ, காவல்துறை அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்தது மகிந்த அரசு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்து வந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றுடன் இழந்துள்ளது.