மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மகிந்த ஆதரவாளர்களைக் களையெடுக்கத் தொடங்கினார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களைக் களையெடுக்கும் அதிரடி நடவடிக்கையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இறங்கியுள்ளார்.

வடக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின்னரே தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு – கூட்டமைப்பு கோரிக்கை

இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியமரும் வரை, வடக்கு மாகாணத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் கோரியுள்ளன.

முல்லை., கிளிநொச்சி மாவட்டங்கள் சிறப்பு கல்வி வலயங்களாகப் பிரகடனம்

வடக்கு மாகாணத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சிறப்பு கல்வி வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளன.

சுன்னாகத்தில் 73 வீத கிணறுகளில் எண்ணெய் மாசு – நீரைப் பருக வேண்டாம் என்கிறார் ஹக்கீம்

சுன்னாகம் பிரதேசத்தில் அமைந்துள்ள பல கிணறுகளில் கிறீஸ் படிமங்களும் கழிவு எண்ணெய் மாசுகளும் படிந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் உள்ள கிணறுகளின் நீரைப் பருகுவதை தவிர்க்குமாறு சிறிலங்காவின் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி தர வேண்டும் – சபாநாயகருக்கு கடிதம்

சிறிலங்காவின் தேர்தல் சட்டம் மற்றும் சிறிலங்கா மற்றும் கொமன்வெல்த் நாடாளுமன்ற விதி முறைகளுக்கு அமைய, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரியுள்ளது.

ஊவா முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிடம் விசாரணை

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிடம், நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு காவல்துறைக் குழுவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.

உதயங்க வீரதுங்க குறித்து விரைவில் அறிக்கை – மங்கள சமரவீர வாக்குறுதி

ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க உக்ரேனிய பிரிவினைவாதப் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தில் கருத்து வாக்கெடுப்புக்கு விட வேண்டிய பகுதிகள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டமூலத்தில், அரசியலமைப்புடன் உடன்படாத- நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் கருத்து வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களை சிறிலங்கா உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

வரும் 20ம் நாளுக்குப் பின்னர் நாடாளுமன்றம் கலைப்பு – சிறிலங்கா அதிபர் அறிவிப்பு

19வது திருத்தச்சட்டமூலம் வரும் 20ம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

19வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் கருத்து வெளியானது

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது அரசியலமைப்புத் திருத்தம், சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு இசைவானதே என்றும், எனினும் இதன் சில பகுதிகளை நிறைவேற்ற கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா உயர்நீதிமன்றம் வியாக்கியானம் தெரிவித்துள்ளது.