மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

தமிழ்நாட்டில் இருந்து 65 அகதிகள் நாளை நாடு திரும்புகின்றனர்

போரின் போது நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியிருந்த 65 இலங்கைத் தமிழர்கள் நாளை சிறிலங்காவுக்குத் திருப்பி அழைத்து வரப்படவுள்ளதாக, சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தல்முறை மாற்றம் குறித்து கட்சித் தலைவர்களுடன் மைத்திரி ஆலோசனை

20வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக, தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது தொடர்பான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமது யோசனைகளை நாளை மதியம் 12 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சஜின் வாஸ் குணவர்த்தன கைது? – கோத்தாவிடம் இன்றைய விசாரணை முடிந்தது

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவரான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன இன்று கைது செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோத்தாவிடம் தொடங்கியது விசாரணை – வியாழன் வரை தொடர் நெருக்கடி

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச போது சிறிலங்காவின் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் போசாக்கு குறைபாட்டினால் சிறுவர்கள் பாதிப்பு – அனைத்துலக அறிக்கை

சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் உள்ள சிறுவர்கள் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சிறுவர் பாதுகாப்பு அமைப்பு (Save the Children) உலகளாவிய அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோத்தாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை – என்கிறது பொது பலசேனா

தாம் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியில், இணைந்து கொள்ளுமாறு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு அதிகாரபூர்வமான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பொது பலசேனா அமைப்புத் தெரிவித்துள்ளது.

மகிந்த அனுமதி மறுத்த ஐ.நா குழுவுக்கு மைத்திரி அனுமதி – ஓகஸ்ட்டில் சிறிலங்காவுக்குப் பயணம்

காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு வரும் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. வரும் ஓகஸ்ட் 3ம் நாள் தொடக்கம், 12ம் நாள் வரை இந்தக் குழு சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே-18 இல் வெற்றிவிழா இல்லை – போரில் மரணித்த அனைவரையும் நினைவு கூர ஏற்பாடு

வரும் மே 18ம் நாள் சிறிலங்காவில் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூரும் நாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

’18 பில்லியன் டொலர்’ குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்- நாமல் சவால்

தனது தந்தையோ அல்லது குடும்பத்தினரோ, வெளிநாடுகளில் 8 பில்லியன் டொலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதை, நிரூபித்தால் தாம் அரசியலை விட்டே விலகுவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்குச் சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.

மீண்டும் விரைவில் மேடைக்கு வருவேன் என்கிறார் மகிந்த

தாம் விரைவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேடைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.