தமிழ்நாட்டில் இருந்து 65 அகதிகள் நாளை நாடு திரும்புகின்றனர்
போரின் போது நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியிருந்த 65 இலங்கைத் தமிழர்கள் நாளை சிறிலங்காவுக்குத் திருப்பி அழைத்து வரப்படவுள்ளதாக, சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.