மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சம்பூர் மக்களின் காணி உரிமைக்காக மீண்டும் உயர்நீதிமன்றம் செல்கிறது கூட்டமைப்பு

சம்பூரில் பொதுமக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கும் சிறிலங்கா அதிபரின் வர்த்தமானி உத்தரவை இடைநிறுத்தி, சிறிலங்கா உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பான  இடையீட்டு மனுவொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்யவுள்ளது.

மகிந்த அணியினரின் வெற்றிவிழா – கொழும்பில் இன்று ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூரும் வகையில், இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் இன்று துக்கம் அனுஷ்டிக்கும் நிலையில், கொழும்பில் மகிந்த ராஜபக்ச அணியினரால் இன்று போர் வெற்றி விழா கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

தேசிய வறுமைக்கோட்டு எல்லைக்குள் யாழ், முல்லை, அம்பாறை மாவட்டங்கள்

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்கள் வறுமைக்கோட்டு எல்லைக்குட்பட்ட சராசரி தலா வருமானத்தைக் கொண்டுள்ளதாக, ஆகப் பிந்திய புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

மாத்தறை இராணுவ அணிவகுப்பை புறக்கணிக்கிறது கூட்டமைப்பு

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்ததை நினைவு கூரும் வகையில், மாத்தறையில் வரும் 19ம் நாள் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள, இராணுவ அணிவகுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் போர்வீரர் ஞாபகார்த்த நிகழ்வில் வழக்கம்போலவே பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு

மாத்தறையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் போர் வீரர்களை நினைவு கூரும் தேசிய நிகழ்வில், வழக்கம்போலவே பாரிய இராணுவ அணிவகுப்பு இடம்பெறவுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று நடைமுறைக்கு வந்தது 19வது திருத்தச்சட்டம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 28ம் நாள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட, 19வது திருத்தச்சட்டம் நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தாவெல தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கின் தேர்தல் தொகுதிகள் பறிபோகாது – பிரதான கட்சிகள் இணக்கம்

சிறிலங்காவின் தேர்தல் முறையை மாற்றியமைக்கும், உத்தேச 20வது திருத்தச்சட்டத்தில், வடக்கு, கிழக்கில் தற்போதுள்ள தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் மாற்றியமைப்பதில்லை என்று இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பூர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சம்பூரில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கைத்தொழில் வலயத்துக்காக தனியார் காணிகளை, சுவீகரிக்க வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யும் சிறிலங்கா அதிபரின் வர்த்தமானி அறிவிப்புக்கு, சிறிலங்கா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

மே இறுதிப் பகுதிக்கு தள்ளிப் போகிறது நாடாளுமன்றக் கலைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம், இந்த மாத இறுதியிலேயே கலைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, எதிர்வரும் 20ம் நாள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டது.

கோத்தா வழக்கின் தீர்ப்பினால் குழப்பத்தில் அரசாங்கம் – கொமன்வெல்த் உதவியை நாடுகிறார் ரணில்

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு மீதான நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக, கொமன்வெல்த் அமைப்பின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.