மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்காவுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு – கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தகவல்

சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகளுடன் இராமேஸ்வரத்தில் வைத்த தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் குறித்து தகவல்களை வெளியிட, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது.

13க்குள் தான் அரசியல் தீர்வாம் – இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுகிறார் மகிந்த

சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்துக்குள்- மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும், அரசியல் தீர்வு ஒன்று, ஆட்சியமைத்து ஆறுமாதங்களுக்குள் முன்வைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

வான்புலிகள் வீசிய குண்டு கட்டுநாயக்க விமானத் தளம் அருகே கண்டுபிடிப்பு

விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் வீசப்பட்ட குண்டு ஒன்று கட்டுநாயக்க விமானப்படைத் தளத்துக்கு அருகே வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு புதிய அரசியலமைப்புத் தேவை – இரா.சம்பந்தன்

தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பே தேவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தி ஹிந்து அங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

காணாமற்போனோர் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட புதிய குழு நியமனம்

காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, காணாமற்போனவர்கள் தொடர்பான அதிபர் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மகிந்தவின் காலில் விழும் மைத்திரியின் ஆதரவாளர்கள்

மாத்தளையில் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும் அதிகாரப்பகிர்வுக்கு இடமில்லை – என்கிறார் மகிந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், கூட்டமைப்பு அதிகாரப்பகிர்வைக் கோரினாலும், நாட்டைப் பிரிக்க ஐக்கிய மக்கள் கூந்திர முன்னணி இடமளிக்காது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

மகிந்தவின் மேடையில் ஏறிய மைத்திரியின் அமைச்சருக்கு நேர்ந்த அவமானம்

மகிந்த ராஜபக்சவின் மேடையில் ஏறிய மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளரான கலை மற்றும் கலாசார அமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்க, அவமானப்பட நேர்ந்துள்ளது.

வடக்கில் சட்டவிரோத சுவரொட்டிகளாம் – 1980களின் நிலை திரும்புவதாக எச்சரிக்கிறார் கோத்தா

வடக்கில் சட்டத்தை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவதாகவும், இந்த நிலை நீடித்தால், அங்கு 1980களில் ஏற்பட்ட நிலை ஏற்படும் என்றும் எச்சரித்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

புதிய திட்டங்கள் தொடர்பாக சிறிலங்காவுடன் பேசுகிறதாம் சீனா

சிறிலங்காவில் புதிய திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் சினா பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.