குருநாகலவில் மகிந்தவுக்கு அதிக விருப்பு வாக்குகள்
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, 423,529 விருப்பு வாக்குகளை பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களில் அதிக விருப்பு வாக்குகளை மகிந்த ராஜபக்சவே பெற்றிருக்கிறார்.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவுடன் போட்டியிட்ட ஐதேகவின் வேட்பாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 286,155 விருப்பு வாக்குகளை பெற்று ஐதேகவின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
- மஹிந்த ராஜபக்ச – 423,529
- தயாசிறி ஜயசேகர – 133,832
- டி.பி. ஏக்கநாயக்க – 82789
- அனுர பிரியதர்சன யாப்பா – 77057
- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – 76714
- சாலிந்த திசநாயக்க – 54318
- இந்திக்க பண்டாரநாயக்க – 46356
- பஸ்நாயக்க – 43020
ஐக்கிய தேசிய கட்சி
- அகில விராஜ் காரியவசம் – 286,155
- ஜே.சி. அலவத்துவல – 106,061
- காமினி ஜயவிக்ரம பெரேரா- 83346
- நளின் பண்டார – 80063
- எஸ்.பி. நாவின்ன – 76714
- அசோக அபேசிங்க – 73184
- இந்துனில் துஷார – 64359
இந்த முடிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கான சகல சலுகைகளையும் இழந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான சலுகைகளைப் பெற்றுக்கொள்கின்றார்.