சீன முதலீட்டாளர் நலன்களை சிறிலங்கா பாதுகாக்க வேண்டும்- வலியுறுத்துகிறது சீனா
சீன முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்குமாறும், இருதரப்பு பொருளாதார உறவுகளை ஊக்குவிக்குமாறும், சிறிலங்காவிடம், சீனா இன்று மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.
சீனாவின் 1.5 பில்லியன் டொலர் முதலீட்டிலான கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ள நிலையில், சீனா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
சீன வர்த்தக அமைச்சின் பேச்சாளர், ஷென் டன்யங் இதுகுறித்து, பீஜிங்கில் கருத்து வெளியிடுகையில், இந்தப் பிரச்சினையை சிறிலங்கா அரசாங்கம் தீர்த்து வைக்கும் என்று நாம் நம்புகிறோம்.
சீன முதலீட்டாளர்களின் சட்டரீதியான நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பது, வர்த்தக மற்றும் பொருளதார அபிவிருத்திக்கு ஆரோக்கியமானது.
சிறிலங்காவுடனான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கு சீனா மிகப்பெரிய முக்கியத்துவத்தை அளிக்கிறது.
பரஸ்பரம் மரியாதை மற்றும், நன்மைகளின் அடிப்படையில் தான், சீனா தனது தொழில் நீறுவனங்களை சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு ஆதரவளிக்கிறது.” என்றும் தெரிவித்துள்ளார்