திருகோணமலையில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, திருக்கோணமலையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. ‘நினைவுகளில் கி.பி.அரவிந்தன்’ என்னும் தலைப்பில்,’நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், கி.பி.அரவிந்தன் அவர்களின் உருவப்படத்திற்கு அவரது மைத்துனரான தனஞ்சயன் மற்றும் ஈரோஸ் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும் அவரது தோழருமான தர்மலிங்கம் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் கி.பி.அரவிந்தன் அவர்கள் தொடர்பான, நினைவுகளைப் பகிர்ந்து அரசியல் ஆய்வாளர் யதீந்திரா மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் அஞ்சலி உரைகளை நிகழ்ந்தினர்.
மேற்படி நிகழ்வில் திருகோணமலையில் உள்ள பல இலக்கியவாதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்கு கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.