பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார பதவி விலகி மீண்டும் ரணிலுடன் இணைந்தார்
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அண்மையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பதவி விலகியுள்ளார்.
ஐதேகவில் இருந்து தாவி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த மனுஷ நாணயக்கார தனது பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா அதிபருக்கு இன்று காலை அனுப்பி வைத்துள்ளார்.
அத்துடன், அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.