றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமனம்
சிறிலங்கா கடற்படைத் தளபதியாக றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில், நடந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து, றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ மற்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கபில வைத்தியரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ண வரும் 22ஆம் நாளுடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே புதிய கடற்படைத் தளபதியாக றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.