மீண்டும் முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு விக்னேஸ்வரன் வாழ்த்து
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வமைச்சருக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், வருங்காலத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்வார் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டு மக்கள் மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளமை மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை எடுத்துக் காட்டுகிறது.
அதனால் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கும் ஈழத்து தமிழ் மக்களுக்கும், பல நன்மைகள் செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.