அழுத்தங்களால் அலறுகிறார் மகிந்த – மின்சார நாற்காலிக்கு அனுப்புவது மேலானதாம்
சிறிலங்கா அரசாங்கம் தன்மீது தொடர் அழுத்தங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, மின்சார நாற்காலிக்கு அனுப்புவதே மேல் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.
அழுத்கமவில் நேற்று ஊடகங்களிடம் பேசிய அவர், “பல்வேறு ஆணைக்குழுக்களின் முன்பாக விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்து. சிறிலங்கா அரசாங்கம் எனக்கு அழுத்தங்களைக் கொடுக்க முனைகிறது.
இவ்வாறு அதிகளவு அழுத்தங்களைக் கொடுப்பதை விட, மின்சார நாற்காலிக்கு அனுப்புவது மேலானது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.