விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி மரணம்
விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி சிவசுப்பிரமணியம்- வயது 43) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இன்று அதிகாலை மகரகம மருத்துவமனையில் மரணமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக மகரகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நிலை மோசமானதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் மரணமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1991இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த தமிழினி, விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக நீண்டகாலம் பணியாற்றியவர்.
போரின் இறுதியில் ஓமந்தையில் வைத்து சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட அவர், 2013ஆம் ஆண்டு புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.