மேலும்

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் இந்திய கடற்படைத் தளபதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள  இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

மரியாதை நிமித்தமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீன்பிடி மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சமூகங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் போன்ற தீவிரமான சவால்களைச் சமாளிப்பதில் இந்தியக் கடற்படையின் முக்கிய பங்கு குறித்து சிறிலங்கா பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பகிரப்பட்ட கடல்சார் வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கூட்டு போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் சிறிலங்கா பிரதமர் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கு ஆதரவளிக்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் திரிபாதி,  இந்தியாவில் பயிற்சி பெறும் சிறிலங்காபடை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *