மேலும்

கொழும்பு வருகிறது அதிநவீன அமெரிக்க நாசகாரி

இன்டிபென்டன்ஸ்-ரக கரையோர போர்க்கப்பலான யுஎஸ்எஸ் சாண்டா பார்பரா -எல்சிஎஸ் 32) (USS Santa Barbara -LCS 32) கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இந்தக் கப்பல் சிறிலங்காவுக்கு முதன்முறையாக  வருகை தருவதுடன், அமெரிக்க-சிறிலங்கா  உறவுகளின் வளர்ந்து வரும் வலிமையையும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பிற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாகவும் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தோ-பசுபிக் பகுதியில் தனது பணியைத் தொடர்வதற்கு முன்னர், எரிபொருள் நிரப்புவதற்கும் மீள்விநியோகத்திற்கும் யுஎஸ்எஸ் சாண்டா பார்பரா குறுகிய பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

“சிறிலங்கா யுஎஸ்எஸ் சாண்டா பார்பராவின் வருகை, அமெரிக்க-சிறிலங்கா கூட்டாண்மை செயற்பாட்டில் ஒரு சக்திவாய்ந்த அடையாளமாகும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங்  தெரிவித்துள்ளார்.

இந்த வருகை கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய உறுதித்தன்மை மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் ஆகியவற்றிற்கான எங்கள் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கப்பல் மேற்கு பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் இயங்கும் அமெரிக்க கடற்படையின் 7வது கப்பற்படையின் ஒரு பகுதியாகும்.

தற்போது நாசகாரி ஸ்குவாட்ரான் 7 (DESRON 7) இன் கீழ் இயங்கும் சாண்டா பார்பரா, ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், கடல்சார் நிலைத்தன்மையை ஆதரிக்கவும் வழக்கமான ரோந்துப் பணிகளை மேற்கொள்கிறது.

2021 ஆம் ஆண்டு பணியில் இணைக்கப்பட்ட  சாண்டா பார்பரா, கரையோர சூழல்களில் செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா போன்ற பிராந்திய கூட்டாளர்களுடன் ஒத்துழைப்பை வளர்க்கும் அதே வேளையில், கடற்கரை மண்டலங்களில் அமெரிக்க கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *